கும்பகோணம் அக்.14- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கொரநாட்டு கருப்பூரில் இயங்கி வரும் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி அகஸ்தி(12). இவர் ‘குண்டான்சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை எழுதி இயக்கி யுள்ளார். இந்த திரைப்படம் நடிகர்கள் நடித்த படம் அல்ல; இது ஒரு அனிமேஷன் படம். மாண வர்களுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்பை யும் வளர்க்கும் சிறந்த படமாகவும், அவர்களின் தனித்துவம் மேன்மை அடைய வும் ஓர் உந்துதலை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவனின் குறும்புத் தனம், கேலி செய்யும் விதம், அவர்களின் தனி திறமையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. இந்தப் படம் தமிழகம் முழு வதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டதை ஒட்டி, கும்ப கோணம் திரையரங்கத்திலும் வெளியிடப்பட்டது. திரையரங்கில் இப்படத்தை பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் மாநகர துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட பலர், படத்தை கண்டுகளித்து மாணவி அகஸ்தியின் அறிவுத் திற மையை பாராட்டினர். இப்படத்தை தயா ரித்த கார்த்திகேயன் மற்றும் படக்குழு வினரை வாழ்த்தினார். அனிமேஷன் படத்தை பாராட்டி தனி யார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி கழகம் மாணவி அகஸ்திக்கு, ‘சிறந்த இளம் இயக்குநர்’ விருதை வழங்கி கவுர வித்தது. இந்த விருதினை தெலுங்கானா ஆளுநர் தமிழரசி சௌந்தர்ராஜன் வழங்கி னார் என்பது குறிப்பிடத்தக்கது.