திருவாரூர், பிப்.17 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூ ராட்சியில் நகர்ப்புற திட்டத்தின்கீழ் கபூர் நகரில் சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. சாலை அமைக்கும் போதே வடிகால் வாய்க்காலுக்கு செல்லும் பாதைகளுக்கு குழாய் அமைக்க வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் வேண்டு கோளை சிபிஎம் தலைவர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கையாக வைத்தனர். குடவாசல் பேரூராட்சி பகுதியில் 15 வார்டு கள் உள்ளன. இதில் 3 ஆவது வார்டு மரப் பட்டறை சாலையில் அமைந்துள்ள கபூர் நகருக்கு, பேவர் பிளாக் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை அமைக்கும் இடத்தில் குறுக்கே வடிகால் வாய்க்கால் உள்ளது. வடிகால் வாய்க் காலுக்கு முறையாக பாசன வழித்தடம் அமைக்காமல், சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், விவசாயிகள் சங்கத்தின் நகரச் செயலாளர் டி.ஏ.சரவ ணன் மற்றும் நகரக் குழு உறுப்பினர்களிடம், சாலை அமைக்கும் போது வாய்க்காலை மூடும் வகையில் வாய்க்கால் செல்லும் பாதையில் கான்கிரீட் தடுப்பு அமைத்து சாலை அமைக்க வேண்டுமென தெரிவித்த னர். இதனையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்து, சாலை அமைக்கும் போது அங்குள்ள வடிகால் வாய்க்கால் செல்லும் இடத்திற்கு தகுந்த வகையில் சிமெண்ட் குழாய் அல்லது கான்கிரீட் பாலம் அமைத்து, தரமான சாலையாக அமைக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரிவித்த னர். பேரூராட்சி செயல் அலுவலர், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நட வடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.