புதுக்கோட்டை, ஜூலை 26 -
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கள் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர், வள்ளி நகர், ரங்கம்மாள் சத்திரம் மற்றும் காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான பழ மரக்கன்றுகள் மற்றும் செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கி நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்வில், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் டி.சலோமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.