திருவாரூர், அக்.27 - நூறு நாள் வேலை திட்டத்தில் நிலுவை யில் உள்ள சம்பளத்தை உடனே வழங்கக் கோரியும், பேரூராட்சிகளிலும் நூறு நாள் வேலையை அமல்படுத்துவதில் காலதாமதம் செய்யும் ஒன்றிய மோடி அரசை கண்டித் தும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நீடாமங்கலம் நீடாமங்கலம் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் டி.முருகேசன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செய லாளர் டி.ஜான்கென்னடி, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் பி.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வலங்கைமான் வலங்கைமான் தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப் பின் மாவட்ட துணைத் தலைவர் என்.பாலையா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலிய பெருமாள் கண்டன உரையாற்றினார். ஒன்றி யச் செயலாளர் என்.ராதா, அமைப்பின் ஒன்றியச் செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். குடவாசல் ஒன்றியம் (வடக்கு) சார்பாக மருதவாஞ்சேரி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பி.சந்திரஹாசன் தலைமை வகித் தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.ரவிச் சந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் வி.ராஜதுரை, தலைவர் வி.எஸ்.ராஜேந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம் கண்டன உரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர்கள் சி.வீர சேகரன், எஸ்.முருகதாஸ், காளிமுத்து, டி.வி. காரல்மார்க்ஸ், நகரச் செயலாளர் ஆர்.எம். சுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் கே. மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.