districts

தீக்கதிர் சந்தா சேர்ப்பு சிஐடியு பேரவை முடிவு

திருவாரூர், ஜுலை 3 -

    இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாவட்டக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தீக்கதிர் சந்தா சேர்க்க இயக்கம் குறித்து கூறினார்.

    சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், போக்குவரத்து தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.வைத்தி யநாதன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன், டாஸ்மாக் சங்க துணைத் தலைவர் பி.என்.லெனின், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் யு.ராமச்சந்திரன் மற்றும் சிஐடியு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தீக்கதிர் நாளிதழுக்கு சிஐடியு அரங்கத்தினரிடம் 126 சந்தாக்கள் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த சந்தா சேர்க்கும் இயக்கத்தில் ஜூலை 7 அன்று பங்கேற்கும் சிபிஎம் மத்தியக் குழு  உறுப்பினர் பெ.சண்முகத்திடம், 126 ஆண்டு சந்தாவுக்கான தொகை யை ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது. சிஐடியு கூட்டுறவு சங்க மாநில நிர்வாகி சித்ரா, ஒரு ஆண்டு சந்தா தொகை ரூ.2000-ஐ கொடுத்து சந்தா இயக்கப் பணியை துவக்கி வைத்தார்.

;