districts

img

மாற்றுத்திறனாளி ஊழியருக்கு படுகாயம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப்.17 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாற்றுத்திறனாளியான ரேசன் கடை ஊழியரின் படுகா யத்திற்கு காரணமான அதிகாரியை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி ஈசானித் தெருவில் உள்ள  ரேசன் கடையில் வெங்கட்ராமன் என்ற மாற்றுத்திறனாளி பணிபுரிந்து வருகிறார். இவரது கடைக்கு 4 நாட்களுக்கு முன்பு பறக்கும் படை அதிகாரியான ரெஜினாமேரி மற்றும் அவரது ஓட்டுநர் வெங்கட்ராமன் ஆய்வுக்காக சென்றுள்ளனர். அப்போது, அரிசி, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் ஆய்வு செய்த பிறகு, அரிசி மூட்டை மேலே உள்ள  கோதுமை மூட்டையை எடை செய்ய வேண்டும். அதை கீழே இறக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். அதற்கு மாற்றுத்திறனாளியான வெங்கட்ராமன், “தன்னால் மேலே ஏற முடியாது’ என கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள், “சொல்வதை செய்” என நிர்ப்பந்தம் செய்துள்ள னர்.  இதனால் மனவேதனையுடன் மாற்றுத்திறனாளி வெங்கட்ராமன், அரிசி மூட்டை மேலே ஏறி, கோதுமை மூட்டைகளை இறக்கிய போது, அரிசி  மூட்டைகள் அனைத்தும் மாற்றுத்திற னாளி வெங்கட்ராமன் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது கால் எலும்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இந்த காயத்திற்கு காரணமான அதிகாரியும், வாகன  ஓட்டுநரும் அங்கிருந்து தப்பிவிட்ட னர்.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  உடனடியாக மாற்றுத்திறனாளி வெங்கட்ராமனை மீட்டு சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்பு, மருத்துவ மனையில் உள்ள காவல் அதிகாரி யிடம், தன்னுடைய பிரச்சனையை  வெங்கட்ராமன் எடுத்துக் கூறுகை யில், அவர் இதையெல்லாம் வழக் காக பதிவு செய்ய முடியாது அவ தூறாக பேசியுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்தும்,  மாற்றுத்திறனாளி வெங்கட்ராம னுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட அதிகாரியை விசாரித்து அவர்  மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். வெங்கட்ராம னுக்கு மருத்துவ சிகிச்சை முடியும் வரை விடுமுறையுடன் கூடிய சம்ப ளத்தை வழங்க வேண்டும் எனக்  கோரிக்கை போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சீர்காழி நகரச்  செயலாளர் ஆர்.சுரேஷ் குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.புரு ஷோத்தமன், மாவட்டத் தலைவர் டி. கணேசன், சீர்காழி ஒன்றியச் செய லாளர் நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.