சேலம், மே 6-
ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் உணவில் மலத்தை அள்ளி வீசியதாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தலித் குடும் பத்தினர் புகார் தெரிவித்து, கதறிய சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தேவண்ண கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கமலஹாசன், ராதிகா குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். தலித் மக்களான இவர்கள், முறையாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வரியையும் 47 ஆண்டு களாக செலுத்தி வருகின்றனர்.இந்நிலை யில், இவர்கள் வீட்டின் அருகாமையில் உள்ளஆதிக்க சமூகத்தை சேர்ந்த சிலர் ராதிகாவின் குடும்பத்தை அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கடந்த சில ஆண்டு களாகவே பல்வேறு அச்சுறுத்தல்களை யும், இன்னல்களையும் கொடுத்து வந்துள்ள னர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டிற்கு வந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு பேர், குழந்தை கள் உணவு அருந்தி கொண்டிருந்த போது, உணவில் மலத்தை அள்ளி வீசியும், ராதிகா மற்றும் அவரது பாட்டி சுருட்டையம்மாள் இரு வரையும் சரமாரியாக தாக்கி ஆடைகளை களைத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்த மாக பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்ட பொழுது, வீட்டின் அருகே இருந்த வாழைமரங்களை வெட்டி சாய்த்தும் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளையும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதனால், செய்வதறியாமல் தவித்த பாதிக்கப்பட்டவர்கள், சங்க கிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார் குறித்து சங்ககிரி காவல்துறை யினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள் ளவில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அனைவரும் ஆதிக்க சமூகத்தினருக்கு ஆதர வாக செயல்படுகின்றனர் என ஆட்சியரிடம் கண்ணீரோடு புகார் தெரிவித்தனர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு தக்க நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை, வேங்கைவயல் பகுதி யில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகார தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தில் உணவில் மலம் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவண்ண கவுண்டனூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சேலம் மாவட்டக்குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதியை சேர்ந்தவர் களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.