சிராப்பள்ளி, மே 27-
கோவையில் இருந்து சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார் தலைமையில், மாநிலச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கி ணைப்பில், 7 பெண்கள் உள்பட 30 க்கும் மேற்பட்டோர் மே 19 அன்று தொடங்கிய நடைபயணத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.
கோவையில் துவங்கிய நடை பயணம் கோவை மாநகரம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக சனிக் கிழமையன்று திருச்சி மாவட்டம் முசிறியை வந்தடைந்தது. முசிறி வந்த நடைபயண குழுவினருக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.பி. நல்லுசாமி தலைமையில் வாணவேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றி னார். இதேபோன்று பிஎச்இஎல் ட்ரைனிங் சென்டர் அருகே பெல் சிஐடியு சங்கம் சார்பில் நடைபயண குழுவின ருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்திற்கு பெல் சிஐடியு பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித் தார். கூட்டத்தில், நாகை சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.