திருவாரூர், ஆக.23 - கொரோனா காலத்தில் மாண வர்களின் கற்றல்-கற்பித்தல் இடை வெளியை குறைக்க தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தின் ஆயிரமாவது நாள் விழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம், தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வரதராஜன், கல்வி ஆர்வலர் முருக வேல் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வி வட்டார தலைமை தன்னார் வலர் அனுசுயா வரவேற்புரையாற்றினார். மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத் தும் விதமாக பாட்டு போட்டி, கவிதை வாசித் தல், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கி ணைப்பாளர் தமிழ்மணி மற்றும் பெற்றோர் கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிங்கப்பூர் யுனி வர்சல் மார்க்கெட் நிறுவனம் கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கியது. மேலும் சிறந்த தன்னார்வலர் ஆசிரியர் ரேவதிக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பரிசுகளை வழங்கி, ராய் டிரஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் சிறப்பு ரையாற்றினார். நாகை அன்புள்ளங்கள் சமூக அறக்கட்டளை ராஜாமணி, சமூக ஆர்வ லர் வேதகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஆசிரியர் ரேவதி வேதகிருஷ்ணன் நன்றி கூறினார்.