districts

img

தமிழ்த் துறை பேராசிரியை மீது நடவடிக்கை கோரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

 கும்பகோணம், ஆக.8-  கும்பகோணம் அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக ஜெய வாணி ஸ்ரீ என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் எம் ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளிடம் தொடர்ந்து அவதூறாகவும் சாதிய ரீதியாகவும் பேசுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்படி  தமிழ்ப் பேராசி ரியை மாணவிகளை, அவதூறாக நீங்கள் ஏன் கல்லூரிக்கு வருகிறீர்கள். குழந்தை பெற்றுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டி யதுதானே என்றும் கல்லூரி மேட்டரிமோனி போல் நடத்துகிறீர்கள் என்றும் அவதூறா கப் பேசியும் அதேபோல் மாணவர்களிடம் துணி துவைப்பவன் வண்ணானாகவும் மாடு மேய்ப்பவன் கீழ் சாதியாகவும் இருக்கத்தான் வேண்டும் என்றும் வன்மமான முறையில் மாணவர்களின் ஒற்றுமையை  குலைக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழாசிரியரை நேரில் கேட்டதற்கு மேலும் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய தால் சக மாணவர்கள் கல்லூரியில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  மேலும் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கும் பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கவும் அவதூறாகப் பேசுவதை கண்டித்தும்  கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர்  ஆனால் கல்லூரி முதல்வர் இரண்டு நாட்களுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம் என கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என எஸ்எப்ஐ சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.