திருச்சிராப்பள்ளி, ஆக.31 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாவட்டக் குழு சார்பில் சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தனிச் சட்டம் அமைக்க வலியுறுத்தி, வெள்ளி யன்று மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். சக்தி வேல் வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச் செயலாளர் சுப்பிர மணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர், மாநில பொருளாளர் மோகனா நிறைவு ரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக டி.முத்துக் குமார், செயலாளராக டி.ரஜினிகாந்த், பொரு ளாளராக கே.அருணன், துணைத் தலைவர் களாக எம்.வீரவிஜயன், ஏ.இளங்கோவன், துணைச் செயலாளர்களாக பி.வீராசாமி, வி. சுப்பிரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். இளங்கோவன் நன்றி கூறினார்.