districts

img

மார்க்சிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதி வழங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்

புதுக்கோட்டை, ஜூலை 13 - தனது பணி நிறைவையொட்டி புதுக் கோட்டையில் ஆசிரியர் ஆர்.தமிழ்ச்செல்வி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.25 ஆயிரம் வளர்ச்சி நிதி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆர்.தமிழ்ச்செல்வி. தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில துணைத் தலைவராகவும் பணி யாற்றி உள்ளார். ஆர்.தமிழ்ச்செல்வி சமீபத்தில் தனது ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில், தனது பணி நிறைவை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரத்தை ஆர்.தமிழ்ச்செல்வி வெள்ளிக்கிழமை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், மாதர் சங்க மாநிலத் தலைவர்  எஸ்.வாலண்டினா உள்ளிட்டோர் உடனிருந்த னர்.