கும்பகோணம், ஆக.18-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “கும்பகோணம் மாநகராட்சியில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்கு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிமம் பெற்று செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டும்.
செல்லப் பிராணி ஒன்றுக்கு ரூ.2,500 வீதம் செலுத்தி, உரிய உரிமம் பெற்று அதில் கூறப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறி வுறுத்தப்படுகிறார்கள். உரிமம் பெறாமல் செல்லப் பிராணிகளை வளர்ப்பதும், அவைகள் சாலையில் திரிவதும் கண்டறியப்பட்டால் மாநக ராட்சிப் பணியாளர்கள் மூலம் வளர்ப்புப் பிராணிகள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், பிராணிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.