districts

தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம்

அறந்தாங்கி, ஜூன் 17 -

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுத லின்படி, மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மண மேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார்.  

    இக்கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு  தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பள்ளிக் கட்டிடங்கள் உறுதித்தன்மையுடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு முறைகள் சரியாக பின்பற்றப்பட வேண்டும். மேலும் பள்ளி செல்லாக்  குழந்தைகள் கண்டறியும் களப்பணியை மேற்கொண்டு, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளி அளவில் குழு அமைக்க வேண்டும். எமிஸ் தொடர்பான பணிகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.

   இக்கூட்டத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் வேல்சாமி மற்றும்  அங்கையற்கண்ணி மற்றும் இல்லம்  தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.