districts

img

பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்

திருவண்ணாமலை,ஜுலை 29- பட்டியல் இன மக்கள் மற்றும்  சிறுபான்மையினர் மீது நடத்தப்படும்  தாக்குதலுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில்  குரல் எழுப்ப வேண்டும் என, மக்களவை உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திரு வண்ணாமலை),   எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி) ஆகியோரிடம்  ததீஒ முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.   அந்த மனுவில், பட்டியல் சாதி, பழங்குடி யினர் குறிப்பாக பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்கள் தற்போதும் தொடர்ந்து வருகிறது. நாடு முழுவதும் நடைபெற்றுவரும் சம்ப வங்கள்  தனித்தனி நிகழ்வு கள் அல்ல. மாறாக தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியால் நிகழ்த்தப்பட்ட வெறுப்பு அரசியல், மக்களை பிரிக்கும் பிரச்சாரத்தின் விளைவுகளே ஆகும். இத்தகைய கொடுமை கள் நிகழாத வண்ணம் தடுக்கவும், குற்றவாளி களை தாமதம் இன்றி கண்டிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்தவும் உறுதி யான தலையீடு நாடாளு மன்றத்தில் இருக்க வேண்டும், எங்கெல்லாம் பட்டியல் சாதியினர் பாதிக்கப்பட்டிருக்கி றார்களோ அங்கெல்லாம்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை யும் உறுதி செய்ய நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தடகள சங்க மாநிலத்துணைதலைவர் எ.வ.வே. கம்பன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில து.பொதுச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட தலைவர் எஸ்.ராமதாஸ், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.வீர பத்திரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் உடன் இருந்த னர்.