பொன்னமராவதி, பிப்.12- பொன்னமராவதி பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், பொன்னமராவதி வாரச் சந்தையை மேம்ப டுத்த 2.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பொன்னமராவதி அமரகண்டான் குளத்தை சுற்றிலும் பூங்கா மற்றும் நடை மேடை அமைப்பதற்காக ரூ.2.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பொன்னம ராவதியில் உழவர் சந்தை அமைக்கப்படும். 15 வார்டுகளிலும் முழுமையான கழிவுநீர் வடிகால் வசதி, தெருவிளக்குகள், பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டு அடிப் ்படை வசதிகள் முழுமையாக மேம்படுத்தப் படும். கூடுதல் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்து இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வோம் என்றார். பரப்புரையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, நகர செயலா ளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், காங்கிரஸ் வட்டா ரத் தலைவர் கிரிதரன், நகர தலைவர் பழனி யப்பன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.