பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் அமைப்புகள் சார்பில் கரூர் மாவட்டம், தென்னிலை கடைவீதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. பேரவை மாவட்ட தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கா.கந்தசாமி சிறப்புரையாற்றினார். தி.மு.க. நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன், ஐக்கிய விவசாயிகள் அணி ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜசேகர், ஹெச்எம்எஸ் மாவட்ட செயலாளர் எஸ். ஆனந்தராஜ், எல்எல்எஃப் மாவட்ட அமைப்பாளர் மா.சுடர்வளவன், உள்ளிட்ட பல்வேறு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.