தேனி, ஜூன் 28-
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒப்பந்த தார ரிடம்லஞ்சம் வாங்கிய ஒன்றிய பணி மேற்பார்வையாளரை லஞ்ச ஓழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர் .
தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது தாயார் சாரதா கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக பதிவு செய்து பணிகள் செய்து வரு கிறார். இந்நிலையில் இவர் கூடலூர் அருகே உள்ள கரு நாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் ஒப்பந்த புள்ளி படி ரூ 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் கழிப்பறை கட்டி முடித்துள்ளார். பணிமுடிந்ததும் இதற்கான பில்தொகை யை அனுமதிக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராதா கிருஷ்ணன் பில்தொகை அனுமதிப்பதற்கு சாரதா மகன் கருப்பசாமியிடம் 14500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க உடன்படாத கருப்பசாமி இதுபற்றி தேனி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுந்தர்ராஜன் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய7500 ரூபாயைமுதல் தவ ணையாக ராதாகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். அவர் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுந்தரராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ராதாகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்தனர். சுமார் ஐந்து மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் அவரை கைது செய்தனர்.