தஞ்சாவூர், மார்ச் 5- தஞ்சாவூர் அருகே குருங்குளம் மேற்கு கிராமத்தில் 60 ஆண்டுகளாக போராடிய 50 குடும்பத்தைச் சேர்ந்த வர்களுக்கு செவ்வாயன்று இலவச வீட்டுமனைப் பட்டாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கல், மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனம் வழங்குதல், மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி வழங்குதல், தொழிலாளர் நல வாரியம் மூலம் ஓய்வூதிய உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்குதல் என 1,738 பேருக்கு ரூ.21.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பி னர்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மேயர் சண்.ராமநா தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். விழாவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நாடாளு மன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சர வணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.