தீ தடுப்பு ஒத்திகை
அரியலூர், பிப்.20 - அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தீய ணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. நிகழ்ச் சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். தீ விபத்து மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால், அதனை எவ்வாறு எதிர்கொள் வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மாணவ-மாணவியர்களி டையே செயல்விளக்கம் அளித்தனர். இதில் சில்ட் ரன் டிரஸ்ட் ஒருங்கி ணைப்பாளர் நிக்கில்ராஜ் கலந்து கொண்டார்.
விவசாயிகளுக்கு பயிற்சி
அரியலூர் பிப்.20 - ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத் துறை மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் அட்மா திட்டத்தின்கீழ் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை யில் உள்ள கட்டமைப்பு களை விவசாயிகள் திறன்பட பயன்படுத்தும் முறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் பட்டு வரும் மேலணிக் குழி அருகே உள்ள பாப்பாந்தோப்பு கிரா மத்தில், வட்டார வே ளாண்மை உதவி இயக்கு நர் சுப்ரமணியன் தலை மையில் இப்பயிற்சி நடை பெற்றது.
வணிகவியல் மன்றக் கூட்டம்
தஞ்சாவூர், பிப்.20 - தஞ்சாவூர் மாவட் டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில், வணிக வியல் துறை மன்றக் கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் திருமலைச் சாமி தலைமையில் நடை பெற்றது. வணிகவியல் துறை தலைவர் முனைவர் நா. பழனிவேலு வரவேற் றார். தன்னம்பிக்கை பேச்சாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எவ்வாறு, தொழில் முனைவோராக தங்களை உருவாக்கி கொள்ளும் வழிமுறை கள் குறித்து உரையாற்றி னார். பேராசிரியர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறி னார். நிகழ்வில் வணிக வியல் துறையைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு பதக்கம் வழங்கல்
பாபநாசம், பிப்.20 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளி யில் வகுப்பு வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பாபநாசம் விவே கானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு விவேகா னந்தா சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் நீலா தேவி, சங்கப் பொருளா ளர் உஷாராணி முன் னிலை வகித்தனர். விவே கானந்தா சமூக கல்விச் சங்க செயலர் தங்க.கண்ணதாசன் 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் அதிக மதிப் பெண் பெற்ற 160 மாணவி களுக்கு பதக்கம், சான்றி தழை வழங்கிப் பேசி னார்.
மாநகராட்சிப் பணிகளுக்கு இடையூறு: தாராசுரம் சந்தையில் 5 கடைகளுக்கு சீல்
கும்பகோணம், பிப்.20 - கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு நேரு அண்ணா இந்த காய்கறி மார்க்கெட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் - காய்கறி கடைகள் அமைத்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்கின்றனர். காய்கறி மார்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி அதிகாரி களுக்காக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி நிர்வாக அலுவ லக கட்டிடம் முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவ லகத்துக்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, படிக்கட்டு களில் காய்கறி மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனை யில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அலுவலக கட்டிடத்திற்கு சென்று வருவதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி உதவி ஆணையர் சதீஷ் தலைமையிலான மாநகராட்சி அதிகாரி கள், மாநகராட்சி நிர்வாக அலுவலகத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை அப்புறப்படுத்தி அந்த பகுதியில் இருந்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
கரூர் மாவட்டத்திற்கு 33 தானியங்கி மழைமானி நிலையங்கள்
கரூர், பிப்.20 - தமிழ்நாடு முழுவதும் பெய்யும் மழையின் அள வினை துல்லியமாக அறியும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் (Automatic Rainguage Station) மற்றும் தானியங்கி வானிலை நிலை யங்கள் (Automatic Wea ther Station) அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. கரூர் மாவட்டத்தில் பெய் யும் மழையின் அளவினை கணக்கிடும் பொருட்டு புதி தாக 33 புதிய தானியங்கி மழைமானி நிலையங்கள் (ARG) நிறுவுவதற்கு தகுதி யான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவு தல் மற்றும் செயல்படுத்து தல் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கரூர் வட்டம்-3, அரவக்குறிச்சி வட்டம்-8, மண்மங்கலம் வட்டம்-3, புகழூர் வட்டம்-5, குளித்தலை வட்டம்–5, கிருஷ்ணராயபுரம் வட்டம்–5 மற்றும் கடவூர் வட்டம்–4 என மொத்தம் 33 தானி யங்கி மழைமானி நிலையங் கள் (ARG) புதிதாக அமைக் கப்பட உள்ளன. அதன்படி, முதற்கட்ட மாக தானியங்கி மழை மானி அமைக்கும் பணிகள் திங்களன்று கரூர் வட்டம், வெள்ளியணை குறுவட்டம், வெள்ளியணை வடக்கு கிரா மத்தில் தொடங்கப் பட்டுள்ளன. மேலும், தானி யங்கி மழைமானியை சுற்றி கம்பிவேலி அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கப்பட உள்ளன. கரூர் மாவட்டத்தில் தானி யங்கி மழைமானிகள் (ARG) அமைக்கும் பணிகள் நடை பெற்று வருவதாகவும், விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும் எனவும் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.
கும்பகோணத்தில் இன்று உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்
தஞ்சாவூர், பிப்.20- மக்களை தேடிச் சென்று, அவர்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதல மைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பிப்.21 (புதன்கிழமை) அன்று கும்பகோணம் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமை யில், அனைத்துத் துறை அலுவலர்கள் முகாம் மேற்கொண்டு, பிப்.21 காலை முதல் கள ஆய்வுப் பணி மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதனன்று மதியம் 2.30 மணியளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாலை 4.30 மணியளவில் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மக்க ளின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற திட்ட மிடப்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குக! சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, பிப்.20 - தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று திருச்சி மத்திய பேருந்து நிலை யம் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, ராம மூர்த்தி, ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாநிலத் தலைவர் என்.எல்.ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். மார்ச் மாதம் கோவையில் சிறப்பு மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
குடிநீர் வசதி செய்து தந்த முன்னாள் மாணவர்கள்
கும்பகோணம், பிப்.20- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)யில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முழு நிதி பங்களிப்புடன், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.4,78,700 மதிப்பிலான குடிநீர் கட்டமைப்பு வசதி துவக்க விழா திங்கட்கிழமை நடை பெற்றது. விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்க துணைத் தலைவர் ராஜசேகர் வரவேற்றார். செயலாளர் விஜயகுமார் திட்ட மதிப்புரை யாற்றினார். கல்லூரி முதல்வர் மாதவி தலைமை வகித்து குடிநீர் கட்ட மைப்பு வசதியை தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
போதைப் பொருள்கள் விற்பனை: தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
அரியலூர், பிப்.20 - அரியலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அரியலூர் மாவட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருள்கள் மற்றும் அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிந்தால் 94896-46744 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அல்லது கட்ச்செவி (வாட்ஸ் அப்) மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கள்ளச்சாரா யம் மற்றும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
களக்காடு முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்
திருநெல்வேலி, பிப் .20- நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடை யம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பள வில் களக்காடு முண்டந் துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக் கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாப நாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் பிப்.20 முதல் புலிகள் கணக் கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27 வரை நடைபெறு கிறது. இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பா ளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குநர் இளையராஜா தலைமை யில் முண்டந்துறை யில் செவ்வாயன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100- க்கும் மேற் பட்டவர்கள் பங்கேற்றனர். பயிற்சி முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதனையொட்டி பாபநாசம், மணி முத்தாறு சோதனைச் சாவடிகள் தற்காலிகமாக மூடப்படு கிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்க ளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள னர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.