வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி
பாபநாசம், ஏப்.7- மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக் குட்பட்ட பாபநாசம் சட்ட மன்றத் தொகுதியில் தலைமை வாக்குப் பதிவு அலுவலர், 1, 2, 3, 4 வாக்குப் பதிவு அலுவ லர்களுக்கான இரண் டாம் கட்ட தேர்தல் பயிற்சி தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் ஆர்.டி.பி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடந்த பயிற்சியில் 1476 பேர் பங்கேற்றனர். இதில் மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் முத்துவடிவேல், திட்ட இயக்குநர் பாலகணேஷ், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து கிருஷ்ணன், பாப நாசம் தாசில்தார் மணி கண்டன், தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகா னந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வாக்குப் பதிவு அலுவ லர்கள் தங்களது தபால் வாக்கினைச் செலுத்தினர்.
தென்னை நாற்றுகள் உற்பத்தி பயிற்சி
தஞ்சாவூர், ஏப்.7 - திருச்சி அன்பில் தர்ம லிங்கம் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் 10 பேர், கிராம தங்கல் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வரு கின்றனர். இதனொரு பகுதி யாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளம் கிராமத் தில் உள்ள அண்ணா நாற் றங்காலில், தென்னை நாற்றுகள் உற்பத்தி குறித்து பயிற்சி பெற்ற னர். அங்கு பணிபுரியும் ராஜராஜேஸ்வரியிடம் நாற்றங்காலின் செயல் பாடுகள் குறித்து கேட்ட றிந்தனர். மேலும் தென்னை யில் நெட்டை ரகங்கள், நெட்டை, குட்டை ரகங் கள், அவற்றின் விலை நில வரம், நாற்றங்கால் மேலாண்மை, நாற்றங்கா லுக்கு பயன்படுத்தப் படும் மண் கலவை, உரம் ஆகியவற்றின் அளவு மற்றும் தரமான நாற்று களை தேர்வு செய்யும் முறை குறித்து கற்றறிந்த னர். மேலும் பாலிதீன் பை களின் மூலமாக நாற்று களை உற்பத்தி செய்யும் முறை குறித்தும் பயிற்சி பெற்றனர்.
பெரம்பலூரில் ரூ.4.10 லட்சம் பறிமுதல்
பெரம்பலூர், ஏப்.7 - மக்களவைப் தேர்த லையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இத னால், பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக் கும் தலா 9 பறக்கும் படை களும், தலா 9 நிலையான கண்காணிப்புக் குழுவின ரும் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட புதிய பேருந்து நிலையம் - ஆத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பெரம்பலூர் காமராஜர் வளைவில் வட்டாட்சி யர் துரைராஜ் தலைமை யிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது மகேந்திரன் என்ப வரது வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.4,10,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டு, பெரம் பலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலு வலகத்தில் ஒப்படைக்கப் பட்டது.
பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையால் வியாபாரிகள் பாதிப்பு
வணிகர் சங்க பேரவை பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப்.7- பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை யால், வியாபாரிகள் தினந்தோறும் பாதிக்கப்படு கின்றனர் என தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சவுந்தர்ராஜன் தெரிவித்தார். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் ஆலோசனை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் என்.புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.முருகேசன் வரவேற்றார். மாநக ரத் தலைவர் எஸ்.வாசுதேவன், குடந்தை வணி கர் சங்கத் தலைவர் கே.எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் குறித்து பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சவுந்தர்ராஜன் கூறியதா வது: மே 5 ஆம் நாளை வணிகர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம். எங்களது பேரவை யின் 41-ஆவது ஆண்டு வணிகர் தின மாநாடு கோவையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான மாநாடா கவும், சில்லறை வியாபாரிகளை பாதுகாக்கும் மாநாடாகவும் அமையும். இந்த மாநாட்டில் தமிழ கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கும் வகையில், மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வர வேற்பு அளிக்கப்படுகிறது. வருகிற தேர்தலில் எங்களது அமைப்பு சார்பில் யாருக்கும் எந்த ஆதரவும் கிடையாது. தேர்தல் நேரத்தை பயன்படுத்தி சில அதிகாரி கள் மனசாட்சி இல்லாமல் பணியாற்றி வருகின்ற னர். தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை யினர், சோதனை என்ற பெயரில் வணிகர் களை தினந்தோறும் அவதிக்குள்ளாக்கி வரு கின்றனர். தேர்தல் ஆணையம் வணிகர்கள் கொண்டு செல்ல வேண்டிய தொகையின் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும். பரிசுப் பொருட்கள் எது, வியாபாரப் பொருட்கள் எது என அதிகாரிகள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 3040 பேர் தபால் மூலம் வாக்களிப்பு
கரூர், ஏப்.7- மக்களவை பொதுத் தேர்தலில் கரூர் நாடாளு மன்றத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்களர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் என மொத்தம் 3040 பேர் தபால் மூலம் தங்கள் வாக்கினை செலுத்தி உள்ள னர் என மாவட்ட தேர்தல் அலு வலர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்றத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 292 வாக்காளர்கள், கிருஷ்ண ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 213 வாக்கா ளர்கள், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 391 வாக்காளர்கள், மணப் பாறை சட்டமன்றத் தொகுதி யில் 382 வாக்காளர்கள், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 342 வாக்கா ளர்கள், வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதியில் 184 வாக்காளர்களும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் கரூர் தொகுதியில் 186 பேர், கிருஷ்ணராயபுரம் தொகுதி யில் 156, அரவக்குறிச்சி தொகுதியில் 164 பேர், மணப் பாறை தொகுதியில் 495 பேர், விராலிமலை தொகுதி யில் 296 பேர், வேடசந்தூர் தொகுதியில் 132 பேர் என மொத்தம் 3233 வாக்கா ளர்கள் வீட்டிலிருந்து படிவம் 12டி மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்த னர். அதனடிப்படையில் ஏப்.4 அன்று 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 721 பேரும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 610 பேரும் என மொத்தம் 1331 வாக்கா ளர்கள் வாக்களித்தனர். தொடர்ந்து ஏப்.5 அன்று 85 வயதுக்கு மேற்பட்ட வாக்கா ளர்கள் மற்றும் மாற்றுத் திற னாளி வாக்காளர்கள் 1346 என மொத்தம் 2677 பேர் வாக்களித்துள்ளனர். ஏப்.6 அன்று விராலி மலை தொகுதியில் 22 வாக் காளர்களும், மணப்பாறை தொகுதியில் 277 வாக்காளர் களும், வேடசந்தூர் தொகுதி யில் 64 வாக்காளர்களும் என 363 பேர் வாக்களித்ததுடன், கடந்த மூன்று நாட்களில் மொத்தம் 3040 பேர் தபால் மூலம் தங்கள் வாக்கினை செலுத்தியுள்ளனர். தபால் மூலம் பெறப்பட்ட வாக்குகள், பாதுகாப்பாக இரும்பு பெட்டிகளில் வைத்து மூடி முத்திரையிடப் பட்டு, காவல்துறை பாது காப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் வாக்குகள் பாது காப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வரு கிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
வேலையின்மையே மோடி அரசின் சாதனை ப.சிதம்பரம் சாடல்
புதுக்கோட்டை, ஏப்.7 - விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மையே 10 ஆண்டு கால மோடி அரசின் சாதனைகள் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம். சிவகங்கை மக்களவைத் தொகுதி ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, கடுமையான விலைவாசி உயர்வும், பல லட்சம் இளைஞர்கள் வேலையின்மையாலும் திண்டாடி வருகின்றனர். வேலையின்மையே மோடி அரசின் சாதனை. மோடி தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி அல்ல; பெருநிறுவன முதலாளிகளின் நலனுக்கான ஆட்சி. தற்போது, 30 லட்சம் மத்திய அரசுப் பணிகள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 12 மாதங்களில் 30 லட்சம் பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கும் எடுக்கப்படும். 2024 மார்ச் வரை, நிலுவையில் உள்ள அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும்” என்றார்.
குறைந்த செலவில் அதிக லாபம் தரும் எள் சாகுபடி வேளாண் இயக்குநர் தகவல்
தஞ்சாவூர், ஏப்.7 - குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் எள் பயிரினை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்று வேளாண்மை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவில் நல்ல வருவாய் தருவது எள் சாகுபடி ஆகும். இதுகுறித்து பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதா கூறியிருப்பதாவது: குறைந்த வயதில், அதாவது 85 நாட்களில் அதிக நீர்த் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர் எள் ஆகும். எள் சாகுபடியில் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை அளவே போதுமா னது. எள் பயிர் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரும். எள் பயிரில் வெள்ளை, கருப்பு, சிவப்பு போன்ற ரகங்கள் உள்ளன. சித்திரை மாதத்தில் வி.ஆர்.ஐ.2,3, டி.எம். பி.7,6 கோ 1 போன்ற ரகங்கள் உகந்ததாகும். சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணை நன்கு கலைத்து விட வேண்டும். விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காக உயிர் பூஞ்சான கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு, நான்கு கிராம் என்ற விகிதத்தில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் மிகவும் லேசாக இருப்பதால் மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். சலித்த சுத்தமான மணலை, விதையின் அளவுக்கு சம அளவு கலந்து சீராக நிலத்தில் தூவி விட வேண்டும். பிறகு குச்சியை வைத்து இழுத்து செல்லும்போது விதைகள் மண்ணில் அழுந்த புதைந்து விடும். பின்னர் 15 ஆம் நாள் 15 செண்டிமீட்டர் இடைவெளியை வைத்து செடியை கலைத்து விட வேண்டும். விதைத்த 30 ஆம் நாள் 30 செண்டிமீட்டர் இடைவெளி வைத்து மீண்டும் ஒருமுறை செடியை கலைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் அதிக கிளைகள் வெடித்து அதிக காய்கள் பிடிக்கும். விதை விதைத்ததுடன் ஒரு முறையும், 7 ஆம் நாள் ஒரு முறையும், பூக்கும் தருணம் ஒரு முறையும், காய் பருவத்தில் ஓர் இரவு முறையும் நீர் பாசனம் செய்ய வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயி கள் பின்பற்றி அதிகமாக மகசூல் பெற்று பயன் பெற லாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.