districts

img

247 ஆவது பிறந்த நாள் மன்னர் சரபோஜி சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர், செப்.24 - தஞ்சாவூர் சங்கீத மகால் தர்பார் ஹாலில்  மன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அன்னாரது உருவச்  சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் செவ்வாயன்று மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இதில், திருவையாறு சட்டமன்ற உறுப்பி னர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து மன்னர் சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், சங்கீத மஹாலில் நடைபெற்ற விழாவில் புலவர் ஏபு.சந்தானம் தமிழில் எழுதிய சிவஞானபோதம் என்ற புத்தகம், முனைவர்.எஸ்.சுதர்ஷன் எழுதிய சாந்தி ரத்னாகரம்-1 என்ற  புத்தகம், டி.ரவி எழுதிய பஞ்சரத்ன பிரபந்தமு என்ற புத்த கம், முனைவர் ஆ.வீரராகவன் மற்றும் எல். அனிதா எழுதிய விஷ்ண்வாதி ஸ்தோத்ர ஸங்கிரஹம் என்ற புத்தகம், பீ.ராமச்சந்திரன் எழுதிய கல்யாண வைபவ மங்களாஷ்டகே என்ற புத்தகம், முனைவர் ஆ.வீரராகவன் எழுதிய வர்ணதீபிகா என்ற புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார்.  இதனை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். மேலும், 6 மறு பதிப்பு புத்தகங்களையும் ஆட்சியர் வெளி யிட்டார்.