districts

img

அரியலூரை அடுத்துள்ள வாலாஜா நகரில் ரூ.2.70 கோடி

அரியலூரை அடுத்துள்ள வாலாஜா நகரில் ரூ.2.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தார். தொடர்ந்து வேளாண் விரிவாக்க மையக் கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர்.