கரூர், ஜூலை 17-
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத் தில் இருவர் உயிரிழந்தனர்.
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலை யில் உள்ள திருப்பதி லே அவுட் பகுதி யைச் சேர்ந்தவர் ராம்குமார்(32). இவர் தனது தாய் மோகனா (65), அக்காவின் மகன் தருண்பிரசாத் (10) ஆகியோருடன் கரூரில் இருந்து கோவைக்கு, தாய் மோக னாவின் சிகிச்சைக்காக காரில் சென் றுள்ளார்.
கார் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி யளவில் கரூர் - கோவை சாலையில் க. பரமத்தி அருகே உள்ள காருடையாம் பாளையம் கிராமம் அருகே சென்றது. அப்போது கார் திடீரென நிலைதடுமாறி திருப்பூரிலிருந்து கரூர் நோக்கி வந்த தனி யார் பேருந்து மீது பயங்கரமாக மோதி யது. இதில் உருக்குலைந்த காரின் இடிபாடு களுக்குள் சிக்கிய ராம்குமாரும், அருகே அமர்ந்திருந்த தருண்பிரசாத்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மோகனாவை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற க.பரமத்தி போலீசார் இருவரது உடலை யும் மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் வந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. க.பரமத்தி போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.