திருவாரூர், நவ.21- திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாவட்ட மாநாடு ரோட்டரி ஹால் எஸ்.நேரு நினைவரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத்தலைவர் எஸ். செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் வெ.சோமசுந்தரம் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.பிரகாஷ் வேலையறிக்கை வாசித்தார். முன்னாள் மாநிலசெயலாளர் எம்.செளந்தரராஜன், ஒய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குரு. சந்திரசே கரன், மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் உ. சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கின்ர். மாநாட்டில்11 பேர்கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு இதில் தலைவராக எஸ்.சுதாகர், செயலா ளராக எஸ்.செங்குட்டுவன், பொருளாளராக ஏ.சுப்பர மணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனார். மாநில செய லாளர் எஸ்.கோதண்டபாணி புதிய நிர்வாகிகளை அறிமுக படுத்தி நிறைவுயாற்றினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நக ராட்சிகள் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசணை 152 ஐ ரத்து செய்ய வேண்டும், பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைத்ததை கைவிட்டு இந்த திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத் நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், திருவாரூர் மாவட்ட வேளாண் கல்லூரியை திருவாரூரில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.