districts

img

புதுக்கோட்டையில் 120 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

புதுக்கோட்டை,  டிச.18 - புதுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 120 கிலோ  கஞ்சாவை ஞாயிற்றுக் கிழமை இரவு போலீசார் பறி முதல் செய்தனர். இதுதொ டர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ப வரை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம், மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளரின் தனிப்படை யினர் மேற்கொண்ட விசா ரணையில், புதுக்கோட்டை வடக்கு 2-ஆம் வீதியில் உள்ள சண்முகம் என்பவரது  வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.  இந்த கஞ்சாவைப் பறி முதல் செய்த போலீசார், சண்முகத்திடம் மேற் கொண்ட விசாரணையில், பெரியார் நகரில் வசித்து வரும் சிங்கம்புணரியைச் சேர்ந்த சேவகமூர்த்தி என்பவரது வீட்டில் 120 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை தனிப் படையினர் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சண்முகம் (33), இவரது மனைவி விந்தியா (29) மற்றும் சேவகமூர்த்தி (34) ஆகிய 3 பேரையும் தனிப் படையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடை பெற்ற முதல் கட்ட விசார ணையில், ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து  வீடுகளை வாடகைக்கு எடுத்து, அவற்றைப் பதுக்கி  வைத்து மொத்த விற்பனை யில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து, கோவில்பட்டியைச் சேர்ந்த  மேலும் பலரையும் போலீ சார் தேடி வருகின்றனர். மேலும் 6 பேர் கைது புதுக்கோட்டை மாவட்டம்  வைத்தூரைச் சேர்ந்த கரண் (20), போஸ்நகரைச் சேர்ந்த  விக்னேஷ் (19), தட்சிணா புரத்தைச் சேர்ந்த பிரவீன்  (23), பிரதீப் (21), மணி கண்டன் (20), தட்சிண புரத்தைச் சேர்ந்த டி.மதன் (18) ஆகிய 6 பேரை புதுக் கோட்டை பேருந்து நிலை யம் பகுதியில் கஞ்சா விற் பனை செய்ததாக நகரக் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர்களி டமிருந்து 2.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த  னர்.