பொன்னமராவதி, ஜூலை 31-
புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர்களாக பணிபுரியும் 12 தொழிலாளர்களுக்கு நிலை யான அரசு ஊதியம் மற்றும் 40 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி புதுக் கோட்டை மாவட்ட உள் ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆலவயல் முதல் பொன்ன மராவதி வரை பிச்சை எடுக் கும் போராட்டம் ஜூலை 31 அன்று நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜூலை 30 (ஞாயிறன்று) பொன்னமரா வதி வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் முன்னி லையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஆலவயல் ஊராட்சியில் 12 மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப ரேட்டர்களுக்கு தற்காலிக ஊதியம் 12 மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் எனவும் மீதமுள்ள தொகையினை வழங்க மாவட்ட நிலை அலு வலரிடம் பேசி வேறு நிதி தொகுப்பில் இருந்து தவணை முறையில் வழங்க சாத்தி யக்கூறுகள் இருப்பினும் மேற்படி தொகை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
நீர்த்தேக்க தொட்டி களை சுத்தம் செய்து அதற் கான தொகையினை நீர்த் தேக்க தொட்டியினை சுத்தம் செய்த ஆபரேட்டர்களே பெற்றுக் கொள்ளுமாறு உறுதி அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் சிஐ டியு மாவட்டத் தலைவர் க. முகமது அலி ஜின்னா, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் பக்ருதீன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் தீன், வார்டு உறுப்பினர் சுப்பி ரமணியன் உள்ளிட்டார் பங்கேற்றனர். இதையடுத்து பிச்சை எடுக்கும் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.