புதுக்கோட்டை, நவ.1 - புதுக்கோட்டை மாவட் டக் காவல் கண்காணிப்பா ளர் வந்திதா பாண்டேவுக்கு ஒன்றிய அரசின் சார்பில் திறன் பதக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது. வந்திதா பாண்டே சிவ கங்கையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய போது, போக்சோ வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக் கும் அளவுக்கு சிறப்பாக புலனாய்வு செய்தமைக்காக இந்தப் பதக்கம் வழங்கப் படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, கடந்த 2009-10 ஆம் ஆண்டில் சிவ கங்கை மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப் பாளராகப் பணியாற்றினார். அப்போது, போக்சோ வழக்கு ஒன்றில் புலனாய்வு செய்து வழக்குப் பதிந்து குற்றவாளியைக் கைது செய்துள்ளார். அந்த வழக் கில், கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் காவல் அலு வலர்களுக்கு வழங்கப்ப டும், ‘கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்’ பெறுவோர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நூற்றாண்டு நாளில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் மொத்தம் 463 பேர் இடம்பெற்றுள்ள னர். தமிழ்நாட்டில் இருந்து பதக்கம் பெறும் 8 பேரில் ஒருவராக வந்திதா பாண்டே எஸ்.பி., இடம்பெற்றுள்ளார்.