districts

img

குடமுருட்டி ஆற்று மரப் பாலத்தை கான்கிரீட் பாலமாக அமைக்க வேண்டும்

கும்பகோணம், ஜன.21 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அருகே உள்ள பருத்திச் சேரிக்கும் குட வாசலுக்கும் இடையில் உள்ள குட முருட்டி ஆற்றின் குறுக்கே பல ஆண்டு களுக்கு முன்பு, கிராம மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மரப்பாலம் அமைக்கப்பட்டது. இதன்  வழியாக பொதுமக்கள் சென்று வந்த னர். ஆனால் மரப்பாலம் பழுத டைந்து ஆற்று நீரில் இழுத்துச் செல்லப் பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள்  சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும்  நிலையில் மிகவும் சிரமப்பட்டு வந்த னர். இந்நிலையில், பொதுமக்கள் தினமும் பாதுகாப்பற்ற நிலையில், இந்த மரப்பாலத்தில் சென்று வரு வதை அரசின் கவனத்திற்கு கொண்டு  செல்லும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியக் குழுவினர் பலமுறை மனுக்கள் அளித்து, போராட்டங்கள் நடத்தினர். ஆனால் எந்த முடிவும் கிடைக்காத தால், கடந்த ஆண்டு மார்ச் 6 அன்று,  கும்பகோணம் - திருவாரூர் சாலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது  திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள், காவல்  ஆய்வாளர்கள் நேரில் வந்து, “போராட் டத்தை ஒத்தி வையுங்கள். மூன்று மாதத்தில் கான்கிரீட் பால கட்டுமானப் பணியை துவக்கி விடுகிறோம்” என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். அதிகாரிகள் கூறியபடி, பாலம் கட்டும் பணி துவங்கவில்லை. இதைக் கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலை யில், ஜன.20 அன்று கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான தீர்வு குறித்து அதிகாரிகள் சரிவர சொல்லாததால் போராட்டம் தொடரும்  என அறிவிக்கப்பட்டது.  இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், செவ்வா யன்று பருத்திச்சேரி - குடமுருட்டி ஆற்றுப் பாலம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிபிஎம் பருத்திச் சேரி கிளைச் செயலாளர் எம்.வீரமணி  தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பழனிவேல், ஒன்றியக் குழு செயலா ளர் வீரக்குமார், குடவாசல் ஒன்றியச்  செயலாளர் லெனின், மூத்த தலை வர்கள் ராமதாஸ், கெரக்கோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டக் களத்திற்கு வந்த  திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி  அலுவலர் ஆனந்தராஜ் உள்ளிட்ட அதி காரிகள், “புதிய பாலம் கட்ட அரசுக்கு ரூ.5.86 கோடிக்கு திட்ட மதிப்பு கோப்பு கள் அனுப்பப்பட்டுள்ளன. வரும் மார்ச்  மாதத்திற்குள் அரசிடம் நிதி பெற்று கட்டு மானப் பணி துவங்கப்படும்” என உறுதி யளித்தார்‌. பின்னர் காத்திருப்பு போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது.