districts

img

உபரி நில விவசாயிகள் பணம் செலுத்தியும் பட்டா கிடைக்கவில்லை;கீர்த்தி உரம் வாங்க நிர்ப்பந்தம்

திண்டுக்கல், பிப்.24 பழனி பகுதியில் உள்ள உபரி நில விவசாயிகள் நிலத்திற்கு உரிய கட்ட ணம் செலுத்தியும் பட்டா வழங்க வில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சஙகம் குறை தீர் கூட்டத்தில் ஆட்சி யரிடம் புகாரளித்தது. வெள்ளியன்று திண்டுக்கல் ஆட்சியர் விசாகம் தலைமையில்  நடை பெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத் தில் தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் என்.பெருமாள் பேசும்போது  பழனி காவலப்பட்டியில் உபரி நிலம் 37 விவசாயிகளுக்கு எப்.பட்டா வழங் கப்பட உள்ளது. விவசாயிகள் நில மதிப்பீட்டுக் கட்டணமும் செலுத்தி உள்ளனர். ஆனால் அந்த விவசாயிக ளுக்கு பட்டா கிடைக்கவில்லை என்றார். ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் மார்ச் முதல் வாரத்தில் சந்தை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதி களின்படி இந்த ஏலம் விடப்பட வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சந்தை விதிமுறைகளை மீறி கூடுதலாக வசூலிக்கும் ஒப்பந்த தாரர்கள் உரிமத்தை ரத்து செய்யப் படும் என்று  எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஆனால் கோழிக்கு வாங்கும் கட்டணக்கொள்ளை தொடருகிறது. ஆட்சியர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காட்டுப்பன்றிகள்: பழனி பகுதியில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் பெரும் சேததத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.  டி.ஏ.பி. சரி... கீர்த்தி உரம் எதற்கு... டி.ஏ.பி. உரம் வாங்க வேண்டும் என்றால் கீர்த்தி உரத்தை வாங்க வேண்டும். அப்படி வாங்க வில்லை என்றால் அந்த விவசாயிக்கு டி.ஏ.பி. உரம் கிடையாது. கீர்த்தி உரம் நுண் நூட்ட சத்துடையது என்று கூறுகிறார் கள். டி.ஏ.பி. உரம் 50 கிலோவுக்கு ரூ.300க்கு, ரூ.200-க்கு கீர்த்தி உரம் வாங்கச் சொல்கிறார்கள். ஒரு ஆதார் அட்டைக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி. தருகிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட இரண்டு மூட்டை டி.ஏ.பி. உரம்  பத்தாது. ஒரு விவசாயி ஏழு ஏக்கர் வைத்திருந்தால் அவருக்கு எப்படி  இரண்டு மூட்டை உரம் போதுமான தாக இருக்கும் என்று என்.பெருமாள் கேள்வி எழுப்பினார்.  விவசாயிகள் சங்க வேடசந்தூர் ஒன்றியச்செயலாளர்  சவடமுத்து பேசும் போது. விவசாயிகளுக்கு தானி யங்களை மூடி வைத்துப் பாதுகாக்க, அரசு தார்ப் பாய்கள் வழங்குகின்றன. இதே போல் கடப்பாறை, மண்வெட்டி போன்ற விவசாயக் கருவிகளும் வழங்குகிறார்கள். அரசு தரமான தார்ப்பாய் வாங்கித்தர வேண்டும். தற்போது வழங்கும் தார்பாய் தரமின்றி உள்ளது. விவசாயிகளுக்கு இந்த  தார்பாய்களை வழங்காமல் வேளாண் துறை அலுவலகத்தில் கிடப்பில் உள்ளது என்றார்.