திண்டுக்கல் ,ஜூன் 21- காப்பி விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறை யில் நோய்களை கட்டுப்படுத்துவது, மகசூலை பெருக்கு வதற்காக சிறப்பு கருத்தரங்கம் செவ்வாயன்று பன்றி மலையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய காப்பி போர்டு துணை இயக்குநர் முனைவர் கருத்தமணி, தீக்கதிர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறிய தாவது: பழனி மலைப்பகுதி காப்பி விவசாயிகள் தொன்று தொட்டு காப்பி விவசாயம் செய்து வருகிறார்கள். இயற்கை விவசாய முறையில் காப்பி உற்பத்தி செய்கிறார்கள். காப்பி யில் ஏற்படும் இளைத் துளைப்பான் நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும். செலவை குறைத்து வருமா னத்தை எப்படி பெருக்க வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கப்பட்டது. இந்த கருத்தரங்கம் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு குறித்தும் நடைபெறுகிறது. காப்பி விவசாயத்தில் குளோரிபைரிபாஸ் என்ற மருந்தை பயன்படுத்துவதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள் ளது. அதாவது அந்த மருந்து காப்பி பருப்பில் கலந்து அதை அருந்தும் மனிதன் பாதிக்கப்படுவதாக கூறப்படு கிறது. அதற்கு பதில் பேந்தோயேட் என்ற மருந்தை பயன்படுத்த வேண்டும். இந்த மருந்து காய்த்துளைப்பான், தண்டு துளைப்பான் நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் பெவரியா பேசியானா என்ற பூஞ்சானத்தையும் பயன்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.
பன்றி மலை பகுதி விவசாயிகள் இயற்கை விவசா யத்திற்கு மாறியதால் இந்த கருத்தரங்கை நடத்துகிறோம். இந்த விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தி காப்பி சாகு படியிலே பூச்சிகளை கட்டுப்படுத்தி நோயை கட்டுப் படுத்தும் முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து உள்ளனர். பருவ நிலை வர உள்ளதால் அதற்கு முன்கூட்டியே காப்பி விவசாயிகளை தயார்ப் படுத்துகிறோம். கர்நாடகா. கேரளா விற்கு சமமாக தமிழகத்தில் கர்பபி விவசாயத்திற்கு மூன்றே முக்கால் கோடி மானியம் கொடுக்கப்பட்டுள்ளது. காப்பி சாகுபடி நிலம் 40 ஆயிரம் ஹெக்டேராக இருந்தாலும் கர்நாடகாவில் 2 லட்சம் ஹெக்டேர் சாகுபடி அளவிற்கு மானியம் ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. ஒரு கோடியே 5 லட்சம் மானியம் கிடைத்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஆர்வமாக வந்து மானியம் பெற மனு செய்கிறார்கள். நாங்கள் கூறுவது போல் காப்பி நடவுசெய்கிறார்கள். நீர் நிலைகளை உயர்த்துகிறார்கள். மேலும் பன்றிமலை, ஆடலூர், பட்டிவீரன்பட்டி, தாண்டிக்குடி, தடியன்குடிசை பகுதி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு ஊக்குவிக்க உள்ளோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு சீனிவாசன் தலைமை வகித்தார். காப்பி போர்டு அதிகாரிகள் டாக்டர் ஜே.தங்கராஜ், வி.ஜவ ஹர் ஆகியோர் பேசினர். பன்றிமலை காப்பி விவசாயிகள் அசோசியேசன் நிர்வாகிகள் சிவக்குமார், முருகானந்தம், வி.ராஜூ, பாண்டி யராஜன், கிருஷ்ணபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.