districts

img

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஆர்.சச்சிதானந்தம் வெற்றி அமையும்

திண்டுக்கல், ஏப்.13- இந்தியாவே திரும்பிப் பார்க்  கும் அளவிற்கு சிபிஎம் வேட்பா ளர் ஆர்.சச்சிதானந்தம் வெற்றி அமையும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல்லில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்ற கூட்டத்தில் தெரிவித்தார். 

மணிக்கூண்டில் வெள்ளி யன்று நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில், ‘‘இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக் கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எத்தனையோ மொழி கள் உள்ளன. பல்வேறு கலாச்சா ரத்துடன் பல்வேறு மாநில மக்கள்  இருக்கிறார்கள். செம்மொழி யாம் தமிழ் மொழிக்கு எட்டரை கோடி மக்களும் இந்து, முஸ்லீம்,  கிறிஸ்துவர் என பல மதங்களைச்  சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உல கத்தில் உள்ள பல நாடுகளில் மக்  கள் பேசும் ஒரே மொழி தமிழ். 

இந்த நாடு சுதந்திரம் அடை வதற்காக திப்பு சுல்தான், ஹைதர்  அலி, வேலுநாச்சியார் போன்ற வர்கள் எல்லாம் மதத்திற்கு அப்பாற்பட்டு, சாதிக்கு அப்  பாற்பட்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதி ராக நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரானார்கள். பல நூற்றாண்டு களாக போராட்டங்கள் நடை பெற்றன. அந்த வரலாற்றை நாம்  திரும்பிப் பார்க்க வேண்டும். 

இந்த தேர்தல் களத்தில் நமது குறிக்கோள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இங்கிருக்  கிற ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் 10 ஆயிரம் வாக்குகள்  பெற்றுத்தர முடியும். குறைந்தது  ஆயிரம் ஓட்டு பெறலாம். கடந்த முறை 12 லட்சம் ஓட்டுகள் விழுந்  தன. அதில் 7 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறோம். இந்த முறை இந்தியாவே திரும்பி பார்க்கிற வெற்றியை பெற்றுத்தருவோம். அதற்காக உழைப்போம் என்று  நமது மாவட்ட சிபிஎம் தலை வர்களிடம் வாக்குறுதி கொடுத் தேன். 

மதநல்லிணக்கம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான மாவட்டம் திண்டுக்கல் என்பது மட்டுமல்ல, இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய மாவட்டமாக திண்டுக்கல் விளங்குகிறது. எந்த மத வேறுபாடுகள் இல்லாமல் நாமெல்லாம் ஒற்றுமையாக உள்ள மாவட்டம். அதை நான் பெருமையாக எப்போதும் சொல்  வேன். நமது ஒற்றுமை தான் கே. பாலபாரதி 3 முறை சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். 

நமது கூட்டணியில் இந்தியா விலேயே அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் இந்த தொகுதியில் ஆர்.சச்சிதானந்தம் வெற்றி பெறுவார். நான் யெச்சூரிக்கு சொல்வேன். நீங்கள் தமிழ்நாட் டுக்கு வந்துவிட்டீர்கள். இந்தியா விற்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று. 

7 முறை மோடி தமிழ்நாட்  டுக்கு வந்துள்ளார். இன்னும் 7  ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு வந்தாலும் மோடி ஒரு சீட்டைக் கூட பெற முடியாது. எந்த காலத் திலும் தமிழ்நாட்டில் உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். இந்திய மக்கள் உங் களை தோற்கடிப்பார்கள். மோடி  குஜராத்துக்கு போனால் உங்க ளுக்காக பிறந்து வந்தேன் என்பார். உத்தரப்பிரதேசத்திற்கு போனாலும் அப்படித்தான் சொல்வார். தமிழ்நாட்டுக்கு வந்  தாலும் அப்படித்தான் சொல்வார்.  அவர் நடத்துவது அரசியல் நாட கமல்ல உண்மையான நாடகம், அது தமிழ்நாட்டில் எடுபடாது’’ என்று ஐ.பெரியசாமி பேசினார்.