districts

தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.41 ஊதிய உயர்வு சிஐடியு எல்.பி.எப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திண்டுக்கல், ஜுலை.12 திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.41 ஊதிய உயர்வாக தோல் வர்த்த கர்கள் சங்கத்துடன் சிஐடியு. எல்.பி.எப்  தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  தோல் பதனிடும் தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை கடந்த 12.7.2022 ஆம் தேதி திண்டுக்கல் தோல் வர்த்தகர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.  பேச்சுவார்த்தையில் தோல் வர்த்த கர் சங்க தலைவர் ஆமீனாரகீம், கௌரவ செயலாளர் சி.கே.சி.எம். மக பூப் சுபஹானி, செயலாளர் வைகை மணி, துணைத்தலைவர் எஸ்.எஸ்.ஐ கண்ணன், சிஐடியு சங்க தலைவர் கே.ஆர்.கணேசன், செயலாளர் சி.பி. ஜெயசீலன், பொருளாளர் ஏ.தவக் குமார், துணைத்தலைவர் ஜெய்லானி, எல்.பி.எப். தலைவர் கே.ராமமூர்த்தி, செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் வெங்கிடுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தை முடிவின் அடிப்ப டையில் தோல் தொழிற்சாலையில் பணி யாற்றும் ஹெல்பர், டிரைவர், கத்தி வேலை, நனவு அறுவை, மற்றும்  மாட்டுத்தோல், பெண் தொழிலாளர் களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.41 ஊதிய  உயர்வு வழங்குவதற்கு  உடன்பாடு ஏற்பட்டது. இந்த உயர்வு வருகிற 16.7. 2022 முதல் அமலாகும். அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.41 வீதம் ஐந்தரை மாதங்கள் அரியர்ஸ் தொகை,  வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள்  வழங்கவும், தினசரி அனைத்து தொழி லாளர்களுக்கும் அலவன்ஸ் ரூ.25, செகன்ட் சிப்ட்க்கு உணவுப்படியாக ரூ.70ம்,  வருடத்திற்கு 3 செட் சீருடை  வழங்கவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த ஊதிய உயர்வு ஒப்பந்  தத்தால்  திண்டுக்கல்லில் உள்ள 42 டேனரிகளில் பணிபுரியும் சுமார் 1500 தொழிலாளர்கள் பயனடைவர். (ந.நி.)