தருமபுரி, ஜூலை 14- பழைய பென்சன்திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் முன் வியாழனன்று ஊழியர் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கணிணி இயக்குபவர்கள், ஊர்புறநூல கர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கிராம உதவியாளர்கள், குழந்தைகள் பாது காப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவர் களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் வழங்கவேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊதியம், அவுட் சோர்சிங் ஊதிய முறைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26 ஆம் தேதி தமிழ கம் முழுவதும் மாவட்ட தலைநகரங்க ளில் தர்ணா போராட்டம் நடத்துவது குறித்தும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 23 ஆம் தேதியில், சென்னை கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த போராட்டங்களில் அரசு ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்று வெற்றிபெற செய்ய வேண்டும். மகளிர் அரசு ஊழியர்களுக்கும், கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்ட களப்பணியாற்றும் மகளிருக்கும் ஏராள மான பிரச்சனைகள் உள்ளன. சமவே லைக்கு சம ஊதியம் மற்றும் அரச அலு வலகங்களில் பெண்களுக்கு பணியிடத் தில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண் டும். அரசு அலுவலகங்களில் தனி ஓய் வறை கழிப்பறை வசதி ஏற்படுத்தவேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் ஆகஸ்ட் 13 அன்று கிருஷ்ணகிரியில் மகளிர் மாநாடு நடை பெற உள்ளது. இந்த மாநாட்டில் மகளிர் அரசு ஊழியர்கள் பங்கேற்று மாநாட்டை வெற்றிபெற செய்ய வேண் டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் முன் நடைபெற்ற ஊழியர் சந்திப்பு பிரச்சாரம் இயக்கத் தில் வலியுறுத்தப்பட்டது. பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளா ளர் கே.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், வட்ட பொரு ளாளர் குமரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலசெயலாளர் மகேஸ்வரி, நிர்வாகிகள் தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் பிரபாகரன்,வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.ரேகா, சுகா தார ஆய்வாளர் நலச்சங்க மாவட்ட தலைவர்கள் யாரப்பாஷா, சுதாகர் ஆகி யோர் பங்கேற்று பேசினர்.