தருமபுரி, ஆக. 13 - திண்டுக்கல் சிறுமலையில் பளியர் இளைஞர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொலை முயற்சியில் ஈடுபட்ட வரை, எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சங்கத்தின் மாநிலக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மலைவாழ் மக் கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பி.டில்லி பாபு, மாநிலப் பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
திண்டுக்கல் சிறுமலையில் உள்ள வேளாண்பண்ணை தாழக்கடை பள்ளத்தைச் சேர்ந்த வெள்ளையன் (18) என்பவர் வழக்கம் போல அடர் வனப்பகுதியில் ஓரமாக தண்ணீர் எடுப்பதற்காக கடந்த 10.8.2024 மாலை சுமார் 7 மணி அளவில் சென்று வந்துள் ளார். அப்பொழுது வேளாண் பண் ணையில் வசித்து வரும் வேலம்பட்டி யார் மகன் சவரியார் திட்டமிட்டு வெள் ளையனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த வெள்ளையன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னர் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் இருந்து துப்பாக்கி ரவைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் திண்டுக்கல் சிறு மலை பகுதியைச் சேர்ந்த பளியர் இன பழங்குடி மக்கள் மத்தியி லும், இதர பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
எனவே, திட்டமிட்டே கொலை செய் திடும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டுள்ள சவரியார் மீது கொலை முயற்சி, எஸ்.சி.எஸ்.டி. தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், பழங்குடியினத் தைச் சேர்ந்த இளைஞர் வெள்ளை யனுக்கு உயர் சிகிச்சை அளித்து உயி ரை காப்பாற்றிட தமிழ்நாடு அரசை யும், முதலமைச்சரையும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் நேர்மையான முறையில் இந்த கொலை முயற்சி வழக்கினை பதிவுசெய்து வழக்கை நடத்தி சம்மந்தப்பட்ட கொலை குற்ற வாளி சவரியாருக்கு கடும் தண்டனை பெற்றத்தர வேண்டும். இனியும் இது போன்ற மிகக் கொடூரமான சாதி ஆணவத் தாக்குதல்கள் நடைபெறா மல் இருக்க அப்பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறை மூலம் பழங்குடி யினரை பாதுகாத்திடவும் அமைதி யான சூழலை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.