தருமபுரி, ஜூலை 9- ஜூலை 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக சேர்க்கப்பட்ட தீக்கதிர் சந்தாத்தொகை செவ் வாயன்று வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடை பெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட சந்தாக்களில், முதல் தவணை யாக ஆண்டு சந்தா 160 மற்றும் அரையாண்டு சந்தாக்கள் 68 ஆகியவற்றுக்கான சந்தாத் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனிடம், தரு மபுரி மாவட்டக்குழு சார்பில் சந்தாத்தொகை ரூ.3,91,400 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநி லக்குழு உறுப்பினர் ரா.சிசுபாலன், தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் வே.விசுவநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாக ராசன், எம்.முத்து, சோ.அருங்சுணன், எஸ்.கிரைஸாமேரி, ஆர்.சின்னசாமி, ரவி, ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், இடைக்கமிட்டி செய லாளர்கள் சி.முரளி, டி.எஸ்.ராமச்சந்திரன், பி.குமார், சக்திவேல், என்பி.முருகன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.