தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில், உலக பால் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சை ஒன்றியத்தில் கிராம பால் உற்பத்தியாளர்களில், அதிக அளவில் தரமான பால் வழங்கியவர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அப்போது, ஆவின் பொது மேலாளர் ம.ரவி, தஞ்சை பால்வளம் துணைப் பதிவாளர் விஜயலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.