குடவாசல், ஜூன் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் அலுவ லகத்தில் தோழர் டி.துரை மணி நினைவரங்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் 27-வது ஒன்றிய மாநாடு நடை பெற்றது. ஒன்றிய தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி சிறப்புரையாற்றி னார். மாவட்ட துணை செய லாளர் கே.சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக் கோரியா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தலைவராக வி.கிருஷ்ணமூர்த்தி, செய லாளராக டி.ஜி.சேகர், துணைத் தலைவராக து. வினோத், துணைச் செய லாளராக எஸ்.அருமை கண்ணு, பொருளாளராக கே.மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து விவசாயி களுக்கும் கூட்டுறவு வங்கி யில் நிபந்தனையின்றி கடன் வழங்கிட வேண்டும். கோடைக் காலங்களில் விவ சாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். மழை-வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுகிற போது விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.