districts

img

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், செப்.23 - தஞ்சாவூர் மாவட்ட  அளவிலான, இளையோருக் கான தடகளப் போட்டிகள், ஸ்ரீ பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதன்கிழமை நடை பெற்றது.  இந்தப் போட்டிகளில், தமிழ்ப் பல்கலைக்கழக, இல க்கியத் துறை முதலாம் ஆண்டு மாணவி பிரிய தர்ஷினி 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி களில் முதலிடம் பெற்றார். இலக்கியத்துறை முதலாம் ஆண்டு மாணவர் நிர்மல் கிஷான் 200 மீட்டர் மற்றும்  ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில்  முதலிடம் பெற்றார். கல்வெட் டியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் உதய குமார் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.  விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொண்ட மாண வர்களான இலக்கியத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்  விஜயவரதன், நாடகத் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் அர்ஜூன், சிவப்பிரகாசம் ஆகியோர் முதல் ஆறு இடங்களுக்குள் வந்துள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் மாநில அளவில் அக்டோபர்  மாதம் திருவண்ணாமலை யில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள  தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாண வர்கள் அனைவரும், தமிழ்ப்  பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவனைச் சந்தித்து சான்றிதழ்களை காட்டி வாழ்த்துப் பெற்றனர்.

;