districts

img

வீணாகும் வாகனங்கள்

 தஞ்சாவூர், மே 4 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவல கத்தின் பின்புறம், ரோடு ரோலர், கழிவுநீர் அகற்றும் லாரி, குப்பை அள்ளும் லாரி, ஜீப், குடிநீர் லாரி உள்ளிட்ட 7 வாக னங்கள் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில், மண்ணில்  புதைந்து வீணாகி வருகிறது. பல ஆண்டுகளாக வெயிலி லும், மழையிலும் நின்று துருப்பிடித்த நிலையில், இந்த வாகனங்கள் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன. பழுதடைந்திருந்தாலோ, இயக்க முடியாத நிலையில் இருந்தாலோ, முறைப்படி அனுமதி பெற்று, பொதுஏலத்தில் விட்டு அரசு கணக்கில் சேர்த்திருக்கலாம். அதைவிடுத்து எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்து வீணாகி வருவது, நகராட்சிக்கு வரும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.