districts

நகை மொத்த வியாபாரியிடம் 6 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் திருட்டு

தஞ்சாவூர் ஜூன் 1-  நகை மொத்த வியாபாரியிடம் நூதன முறையில் 6 கிலோ தங்க நகைகள் மற்றும் 14  லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.  சென்னையை சேர்ந்தவர் மணி (52). நகை  மொத்த வியாபாரியான இவர் சென்னையி லிருந்து, தஞ்சையில் உள்ள நகைக்கடை களுக்கு தங்க நகைகளை கொண்டு வந்து  விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில்  செவ்வாய்க்கிழமை இவர் சென்னையி லிருந்து தஞ்சைக்கு வந்தார். பின்னர் தான்  கொண்டு வந்திருந்த நகைகளை பல நகைக் கடைகளுக்கு கொடுத்து விட்டு பணம் பெற்றுக் கொண்டார். இரவு நேரம் ஆனதை  அடுத்து டிபன் சாப்பிடுவதற்காக தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள  ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். உணவகத்தில் கூட்டம் இருந்ததால் தைரியமாக தான் கொண்டு வந்த நகைப் பையை கீழே வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அவர் அருகில் ஒரே மாதிரியாக உடை உடுத்தியிருந்த சிலர் இரு புறமும் கடந்து சென்றுள்ளனர். கை கழுவ  செல்வது போலும், உணவு பார்சல் சொல்வது  போலவும், மணி உட்கார்ந்திருந்த டேபிளை  குறுக்கும் நெடுக்குமாக கடந்து சென்றுள்ள னர். உணவகத்தில் பலரும் வந்து செல்வது  வழக்கம் என்பதால் மணிக்கு எவ்வித சந்தேக மும் ஏற்படவில்லை.

சாப்பிட்டு முடித்த பின்னர்  கை கழுவ எழுந்தவர் தனது நகைகள் மற்றும் பணம் வைத்திருந்த பேக்கை பார்த்த போது  அதைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணி உணவகத்தை சுற்றி சுற்றி  வந்து தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அவரது  பேக்கை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒரே மாதிரி உடை உடுத்தி சுற்றிசுற்றி வந்தவர்கள் தான் நகைப் பையை கொள்ளையடித்துள்ள னர் என்று உணர்ந்துள்ளார். மணி நகைக்கடைகளுக்கு வருவதை மிகவும் நூதனமாக நோட்டம் விட்டு கும்ப லாக வந்து, திட்டமிட்டு அவரது நகைப் பையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உடனே மணி இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். தொ டர்ந்து ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர். அப்போது மணி  தனது பையில் 6 கிலோ 300 கிராம் தங்க நகை கள் மற்றும் ரூ.14 லட்சம் பணம் வைத்திருந்த தாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.  பின்னர் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரே  மாதிரியாக உடையணிந்த 9 பேர் உணவகத்திற் குள் வருவது தெரிந்தது. தொடர்ந்து மேற்கு  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.