districts

img

திருவையாறு புறவழிச்சாலை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்

தஞ்சாவூர், டிச.13- திருவையாறு புறவழிச் சாலை பிரச்சனைக்கு பேசி தீர்வு காணப்படும் என பள்  ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே கண்டி யூரில் கால்நடை மருந்தகக் கட்டடத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரி விக்கையில், “மக்களிடமி ருந்து வரப் பெற்ற கோரிக் கைகள், மனுக்களை தொட ர்ந்து, கடந்த ஆண்டு மக்கள் நலனுக்கான பல்வேறு அடிக்கல்லை முதல்வர்  நாட்டினார். இதேபோல, ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி களை முதல்வர் வழங்கி னார். இதைத்தொடர்ந்து, மனுக்கள் அடிப்படையிலும்,  மாவட்ட நிர்வாகத்துக்கு வரு கிற கோரிக்கைகள் அடிப்ப டையிலும் அந்தந்த பகு திக்குத் தேவையான கட்ட டங்களை, குறிப்பாக விவ சாயிகளுக்குத் தேவையான கட்டடங்களைத் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. பூத லூர், திருவையாறு, பாப நாசம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் ரூ.  2.27 கோடி மதிப்பில் அங்  கன்வாடி உள்பட 9 கட்ட டங்கள் திறக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணி முடிவ டைந்த கட்டடங்களும் விரை வில் திறந்து வைக்கப்பட உள்ளன. இதுபோன்று, மக்களுக்குத் தேவையான பணிகளைத் தமிழக அரசு உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது.  திருவையாறு புறவழிச் சாலை திட்டத்தில் இரண்டு,  மூன்று தரப்பினர் வெவ்வேறு கருத்துகளை கூறுகின்றனர். இத்திட்டம் வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்ற னர். மற்றொரு தரப்பினர் வேண்டாம் என்கின்றனர். இந்த அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது. எனவே, கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் தலை மையில் அமர்ந்து பேசி, யாருக்கும் பாதிப்பு ஏற் படாத வகையில் சுமூகத் தீர்வு காணப்படும்” என்றார். பூதலூர், திருவை யாறு, பாபநாசம், திருவிடை மருதூர் ஆகிய ஒன்றியங்க ளில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திரு வையாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்  தலைவர் எஸ்.கே.முத் துச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.