districts

img

குடிமனை பட்டா கேட்டு பட்டியலின மக்கள் காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணம், மார்ச் 13- தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டம் கோவிந்தபுரம் ஊராட்சி ஆடுதுறை பேரூராட்சி கள் வசிக்கும் வானாப்புரம் பட்டிய லின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வலியுறுத்தி திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு விசிக முன்  னாள் மாவட்டச் செயலாளர் தமிழ ருவி தலைமை வகித்தார். தொண்டர் அணி மாவட்டச் செய லாளர் கே.பி.செல்வம், ஒன்றியச் செயலாளர் சிவனேசன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவ பாரதி, பக்கிரிசாமி, திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.பி.நாகேந்திரன், எம்எல்எம் கட்சி மாவட்டச் செயலாளர் கண்ண யன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். போராட்டத்தில், ‘‘சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக விலை யில்லா வீட்டு மனை பட்டா வேண்டி  சிபிஎம், விசிக உள்ளிட்ட அமைப்பு கள் மூலம் தொடர் போராட்டம் நடை பெற்றது. ஆனால், இதுவரை அப்பகுதி  பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதில், திரு விடைமருதூர் வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களின் தொடர் அலட்சி யத்தால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி பட்டியலின மக்க ளுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டன.