தஞ்சாவூர், ஜூலை 8 - தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து, ஓராண்டாகியும் செயல்படாமல் பூட்டியே கிடக்கும் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தை திறந்து செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பி னரை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை முறையிட வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பலமுறை வலியுறுத்தியும், போராட்டம் நடத்தப்பட்டும் இதுவரை அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. எனவே சட்டமன்ற உறுப்பினர் அலு வலகத்தை திறந்து செயல்படுத்த வலியு றுத்தி வெள்ளிக்கிழமை நூதனப் போராட் டம் நடைபெறும் என இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து ஒன்றியச் செயலாளர் செ. பெர்னாட்ஷா தலைமையில், மாவட்டத் தலை வர் ஆம்பல் துரை.ஏசுராஜா, ஒன்றியத் தலைவர் கோ.மாஸ்கோ, ஒன்றியப் பொரு ளாளர் ஆர்.ஆனந்தராஜ் மற்றும் வாலிபர் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பூட்டிக் கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவல கத்தில், ஓராண்டு நினைவு தின அஞ்சலி செலுத்த மாலையுடன் வந்து நூதனப் போராட்டம் நடத்த ஊர்வலமாக சென்றனர். தகவலறிந்து வந்த ஒரத்தநாடு காவல் துறை ஆய்வாளர் வெங்கடேசன், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் வருவாய் துறையினர், வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மூன்று நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறக்க நடவ டிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காத்தி ருக்கும் வகையில் கொட்டகை அமைத்து தரப்படும். சட்டமன்ற உறுப்பினர் அலுவ லகத்தில், தகுந்த பணியாளர்கள் மூலம் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, வாலி பர் சங்கத்தின் நூதனப் போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது.