districts

img

ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்தது  

தஞ்சாவூர் ஜூலை 28-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. பழுதடைந்த நிலையில் உள்ள மேற்கூரையை சரிசெய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஒரத்தநாடு வட்டாட்சி யர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், வட்ட வழங்கல் அலுவலகம் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த அலுவல கத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏகப்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர். வட்ட வழங்கல் அலுவலர்,  வட்ட வழங்கல் ஆய்வாளர் உள்ளிட்ட ஏராளமானோர் பொதுமக்களின் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.  அப்போது வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேற்கூரை  திடீரென இடிந்து சரிந்ததில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். நல்வாய்ப்  பாக பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் காயம் மற்றும்  உயிர்ச்சேதமின்றி தப்பினர்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரத்தநாடு வட்டாட்சி யர் அலுவலகம் மராமத்துச் செய்யப்படாமல் செயல்பட்டு  வருவதால், அங்கு உள்ள கட்டிடங்கள் மிகவும் சேதம டைந்து அபாயகரமான நிலையில் உள்ளது.  நடவடிக்கை எடுக்க கோரிக்கை  எனவே, பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படுவ தற்கு முன், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  உடனடி தீர்வு காண வேண்டும் எனவும், மழை காலத்தில்  மேற்கூரைகள் அல்லது கட்டிடங்கள் விழுந்து விடாத வண்ணம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் மாவட்ட  நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்  என பொதுமக்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.