தஞ்சாவூர், ஏப்.25 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் பேராவூரணி மாவட்ட உரிமை யியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றம் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசுகையில், “தஞ்சை பெரிய கோவிலை முதல்முறை நான் வந்து பார்த்து பிரமித்த பிறகு, இந்த பகுதி யின் கலாச்சாரமும், பண்பாடும் என்னை கவர்ந்துள்ளது. தமிழக அரசும், முதல மைச்சரும் நீதித்துறை தொடர்பான பணி களுக்கு எவ்வித தயக்கமுமின்றி நிதி ஒதுக்குவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீதியை தேடி மக்கள் அலையக் கூடாது. மக்களுக்கு அருகி லேயே நீதி கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் நீதிமன்றங்கள் திறக்கப் படுகின்றன. நீதிமன்றங்கள் திறக்கப்படு வதால் சட்டப் பிரச்சனைகள் தீரலாம். ஆனால் மக்கள் மனங்களில் மனித நேயம் வளர வேண்டும். அதற்கான காரணங்களை வழக்கறிஞர்களும், பொதுமக்களும் உருவாக்க வேண்டும். பார் கவுன்சிலின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றி தருகிறேன்” என்றார். விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன், கார்த்தி கேயன், பவானி சுப்பராயன், தமிழ் செல்வி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா கந்த புனேனி, எம்எல்ஏ-க்கள் பேராவூரணி அசோக்குமார், பட்டுக்கோட்டை அண்ணா துரை, முன்னாள் எம்எல்ஏ கோவிந்த ராசு மற்றும் வழக்குரைஞர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை பேரா வூரணி நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் துவங்கியுள்ளது. இதை யடுத்து வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர் மோகன் தலைமையில் பொதுமக்கள், வழக்காடிகளுக்கு இனிப்பு வழங்கினர்.