districts

img

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி:நவீன காது சிகிச்சை மூலம் 50 பேருக்கு பேச்சுத் திறன்

தஞ்சாவூர், ஜூலை 6-  

      தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன காது  சிகிச்சை மூலம் 50 பேர் பேச்சுத்  திறனை பெற்றுள்ளனர் என கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தெரி வித்தார்.  

    தஞ்சாவூர் மருத்துவக்கல் லூரியில் வியாழக்கிழமை நடை பெற்ற சிறப்பு மருத்துவ முகாமை  துவக்கி வைத்த அவர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது:-

     தஞ்சாவூர் மருத்துவமனையில் 57 வயதுடைய ஒரு பெண் தனது சிறு நீரகத்தை தனது 37 வயது மக னுக்கு தானமாக வழங்க வியாழக் கிழமை முன் வந்தார். சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டு அவரது மகனுக்கு பொருத்தப்பட்டது.  

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறவியி லேயே செவித்திறன் இல்லாத குழந்தைகளுக்கு, மாவட்டத் தொடக்கநிலை இடையீட்டு மையம்  மூலம் பரிசோதனை மேற்கொள் ளப்படுகிறது. இதுவரை பிறவி லேயே செவித்திறன் இல்லாத 50 குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.

     இவர்களுக்கு காக்ளியர் பிளான்ட் என்கிற நவீன காது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம், இக்குழந்தைகள் பேச்  சுத் திறன் பெற்று, நல்ல நிலை யில் உள்ளனர். இந்த நவீன சிகிச்  சைக்கு தனியார் மருத்துவமனை யில் ரூ. 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை  செலவாகும்.

     தஞ்சாவூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் முற்றிலுமாக இல வசமாக நிறைவேற்றப்படுகிறது என்றார்.  

     மேலும் அவர் கூறுகையில், தூய்மைப் பணியாளர்கள் நலன் கருதி, தூய்மைப் பணியாளர் நல  வாரிய உறுப்பினர் சேர்க்கை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் 95 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள் ளது. அரசு ராசா மிராசுதார் மருத்து வமனையில் ஏறக்குறைய 165 பேருக் கம், மருத்துவக்கல்லூரியில் 270 பேருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என் றார்.

;