தஞ்சாவூர், பிப்.12 - தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் சனிக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வரு கிறது. பலத்த மழை காரணமாக, சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல்மணிகள் மழை யில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்தால் விவசாயிகள் பலத்த இழப்பை சந்திக்க நேரிடும் என்கின்ற னர். இந்நிலையில் விவசாயிகள் வயல்களில் தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அதேபோல் குறிச்சி, பாலத் தளி உள்ளிட்ட பேராவூரணி வட்டா ரப் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விற்பனைக்காக நெல் மூட்டை களைக் விவசாயிகள் கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். திடீர் மழை காரணமாக விவசாயிகள் தார்பாய் கொண்டு நெல்லை மூடி பாதுகாக் கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்தாலோ, நெல் கொள்முதல் தாமதமாகும் பட்சத்திலோ விவசாயிகள் பலத்த இழப்பை சந்திக்க நேரிடும். எனவே தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். நெல்லை பாதுகாக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் வயல்களில் நெல்லை கொட்டி வைத்திருந்த நிலையில், வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அதை வடிய வைக்கும் பணியில் விவசாயி கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிக பரபரப்பளவு கொண்ட பகுதிகளில் கூடுதலாக நடமாடும் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என என பள்ளத்தூர் பகுதி விவசாயி கள் கூத்தலிங்கம், முருகையன் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் சொல் லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர்.
- ஜகுபர் அலி, தஞ்சை