தஞ்சாவூர், ஜூலை 19 - பேராவூரணியில் இருந்து மாவடு குறிச்சி செல்லும் வழியில் ஆனந்த வல்லி வாய்க்கால் சாலையை சீர மைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே ஆனந்தவல்லி வாய்க்கால் கரை ஓரத்தில் உள்ள சாலை சுமார் 15 கி.மீ தூரம் உள்ளது. ஆவணத்தி லிருந்து பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, கழனிவாசல் வழி யாக கொரட்டூர் சென்றடைகிறது. பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு இப்பகுதியில் ஏறத்தாழ 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் தனி யார் பேருந்துகள், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் தினந்தோறும் இச்சாலை யில் சென்று வருகின்றன. பழைய நகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு பகுதி மாணவர் கள், பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் தின மும் ஆனந்தவல்லி வாய்க்கால் கரை ஓரத்தில் உள்ள சாலையின் வழியாகவே பேரா வூரணிக்கு வந்து செல்கின்றனர். ஆனந்தவல்லி வாய்க்கால் கரை ஓரத்தில் உள்ள இச்சாலையில், பொன்காட்டில் இருந்து மாவடுகுறிச்சி, பழையநகரம் வரை 6 கி.மீ தூரம் உள்ள, பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் சேத மடைந்து, கப்பிகள் பெயர்ந்து, மண் சாலை போல் உள்ளது. குண்டுங்குழியுமாக போக்கு வரத்திற்கு பயனற்ற வகையில் உள்ள இச்சாலையில் மழைக்காலத்தில் முற்றிலும் பயணிக்க முடியாத நிலை உள்ளது. சாலை யின் இருபுறமும் புதர்கள் மண்டி போக்கு வரத்திற்கு சிரமமாக உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என மாவடுகுறிச்சி கிராமத்தினர் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் வே. ரெங்கசாமி, உடனடியாக இந்தச் சாலையை சீரமைத்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.