districts

கெட்டுப் போன இறைச்சி, சமைத்த உணவு பண்டங்கள் பறிமுதல்

கும்பகோணம்,  மே 11 - சமீபத்தில் கேரள மாநி லத்தில் ஒரு மாணவி உயிரி ழக்கவும், தமிழகத்தில் அறந்தாங்கி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் பகுதிகளில் உடல் நலக்குறைவு ஏற்பட காரணமான ஷவர்மா துரித  உணவு, அசைவ பிரியர்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாநி லம் முழுவதும் உணவு பாது காப்புத் துறை அலுவலர்கள் உணவகங்களில் சோதனை  மேற்கொண்டு வருகின்ற னர்.  இதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாது காப்புத் துறை அலுவலர் சித்ரா மேற்பார்வையில், கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில், உணவு பாது காப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற் கொண்டனர். அதில் சுமார் 15 கிலோ  அளவிலான, கெட்டுப் போன இறைச்சி மற்றும் சமைத்த உணவு பண்டங் கள் ஆய்வில் கண்டறியப் பட்டு குப்பையில் கொட்டி  அழித்தனர். மேலும் தர மற்ற சமையல் கூடங்களை  சரி செய்திட பல உணவகங் களுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடையை மீறி நெகிழி பொருட்களை பயன்பாட் டிற்காக வைத்திருந்த ஒரு உணவகத்திற்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதி யில் உள்ள பானிபூரி தயா ராகும் உணவுக்கூடமும் ஆய்வு செய்யப்பட்டது.